பக்கங்கள்

01 மார்ச் 2013

பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் - சவேந்திர சில்வா

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் எனவும் அவர் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமை பேரவையில் ஈழவாதிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு தாம் உரிய பதிலை வழங்க போவதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த பொய்யான குற்றச்சாட்டை இராணுவத்தின் மீது சுமத்த ஏன் நான்கு வருடங்கள் தாமதமானது என தான் கேள்வி எழுப்ப போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை மனித உரிமை பேரவையில் இன்றைய தினம், பாலச்சந்திரன் சம்பந்தமான புகைப்படங்கள் அடங்கிய நோ பையர் ஷோன் திரைப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்கிய செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரேவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தான் சவால் விடுப்பதாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே குறித்த வீடியோ திரைப்படம் மனித உரிமை பேரவையின் மண்டபம் ஒன்றில் திரையிடப்பட உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்துமாறு இலங்கை மனித உரிமை பேரவையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.