பக்கங்கள்

27 மார்ச் 2013

அசாத் சாலியை கைது செய்ய பொலிசார் தீவிரம்!

News Serviceபொலிஸார் தன்னைக் கைது செய்ய முயற்சிப்பதாக முஸ்லிம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். தம்மைக் கைது செய்வதற்காக நேற்று முன்தினம் காவல்துறையினர் வீட்டுக்குச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தான் தமது சட்டத்தரணி ஊடாக பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் கடந்த வாரம் அசாத் சாலிக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகளுக்கு அசாத் சாலி சமுகமளிக்கவில்லை. அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் விசாரணை நடாத்த இவ்வாறு அழைப்பு விடுத்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கத்தை வலியுறுத்துமாறு அசாத் சாலி, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.