பக்கங்கள்

29 மார்ச் 2013

கிளிநொச்சியில் இரு இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர்!

கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற இரு யுவதிகள் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் போயுள்ளதாக யுவதிகளது பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.காணாமல் போனவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளி என்றும் மற்றையவர் செஞ்சோலையில் இருந்து கல்வி கற்றவர் என்றும் அவர்களது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த இ.ரோஹினி (வயது 23) கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த கே.வினோதினி ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்களாவர். இது தொடர்பில் காணாமல் போன இ.ரோஹினியின் தாயார், 'தனது மகள் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆனைவிழுந்தான் பகுதியில் வசித்து வந்ததாகவும் தொழில் நிமித்தம் கிளிநொச்சியில் தங்கியிருந்து தனது நண்பியுடன் இணைந்து தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றில் குழாய் பொருத்தும் பயிற்சியில் ஈடுபட்டுவந்தபோதே கடந்த 2011 ஜூன் மாதம் தொடக்கம் இருவரும் காணாமல் பபோயுள்ளதாகவும் தெிவித்தார். இது தொடர்பில் அக்கராயன் பொலிஸ் நிலையத்திலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ரோஹினியின் தாயார் மேலும் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.