பக்கங்கள்

10 மார்ச் 2013

முஸ்லிம்களை வெளியேற்றுமாறு துண்டுப்பிரசுரங்கள்!

கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் “கிழக்கிஸ்தான்” என முஸ்லிம் மாகாணமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு துணைபோகும் வகையில் தமிழர்கள் கட்டிடங்களை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வழங்க வேண்டாம் என மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன. “திராவிடன் சேனை என்ற” அமைப்பின் பேரிலேயே இந்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுவருகின்றன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளின் வழிநடத்தலுடன் இலங்கையை எதிர்காலத்தில் இஸ்லாமிய நாடாக மாற்றும் திட்டத்தின் முதல் கட்டம் கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தானாக மாற்றுவது. இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழர் தாயகபூமியை கையகப்படுத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வியாபார நிலையங்களை விலையாகவும் குத்தகைக்கும்பெற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயகப்பகுதிகளில் வியாபாரம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளை உடன் வெளியேற்றுமாறு எமது அமைப்பு எச்சரிக்கின்றது. அத்துடன் இந்த துரோகத்தனத்துக்கு துணைபோகும் தமிழ் கட்டிட உரிமையாளர்களே உங்கள் சொத்தை அழிவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.