பக்கங்கள்

28 மார்ச் 2013

கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரின் ஒருங்கமைப்பில் விபச்சார விடுதி முற்றுகை!

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் இயக்கப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று இன்று பிற்பகல் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் எஸ். நிசாஷந்தனின் ஒழுங்கமைப்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் மற்றும் யாழ்.பிரதேச செயலாளர் ஆகியோர் ஊடகவியலாளர்களுடன் விடுதியினை ஆதாரத்துடன் முற்றுகையிட்டனர் எனவும் இவ்விடுதியானது ஈ.பி.டி.பி ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் அமைப்பாளர் ஒருவரால் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடுதியானது பிடிக்கப்படும் போது குறித்த விடுதியில் 5 இற்கும் அதிகமான பெண்கள், மாணவிகள் இனந்தெரியாத ஆண்களுடன் தங்கியிருந்துள்ளனர்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை வைத்து இவ்விடுதியானது இயக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.முற்றுகையின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் விடுதியில் பிடிபட்டனர். விடுதியினை பிடித்த போது பொலிஸாருக்கு பிரதேச செயலாளரும் மாநகர ஆணையாளரும் பல முறை தகவல் சொன்ன போதும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் இறுதி வரை சமூகமளிக்கவில்லை. ஆனால் விடுதி பிடிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் விரைந்து வந்தனர். விடுதிக்கு முன்னர் ஈ.பி.டி.பி யின் மகேஸ்வரி நிதியமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜனின் அலுவலகமும் உள்ளது. விடுதியில் பிடிக்கப்பட்ட பெண்களும் ஆண்களும் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை ஏற்கனவே சுமங்கலி என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி பிடிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.