பக்கங்கள்

01 பிப்ரவரி 2011

பாதாள உலக குழுத்தலைவர்கள் இருவர் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளனர்!

கொழும்பு நகரில் செயற்பட்டு வரும் இரண்டு பிரதான பாதாள உலக தலைவர்களான முகத்துவாம் 'இந்திரா' மாளிகாவத்தை 'மல்லா' ஆகியோர் அடையாளம் தெரியாத இரண்டு ஆயுத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கு, யாரால் கடத்திச் செல்லப்பட்டனர் என்ற தகவல் இதுவரை தெரியவரவில்லை. கிம்புலாஹெல குணா என்ற பாதாள உலக குழுத் தலைவரின் பிரதான சகாவான இந்திரா, கொலைகள், போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் சம்மந்தப்பட்டவர் என காவற்துறையினர் கூறியுள்ளனர். மீதொட்டமுல்லை பிரதேசத்தில் இருந்த போது, இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை மாளிகாவத்தை பிரதேசத்தில் செயற்பட்டு வந்த மல்லா என்ற பாதாள உலக குழுத் தலைவர், கொலை குற்றங்களுடன் சம்மந்தப்பட்டவர் எனவும் கொலை குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர் எனவும் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், மாளிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கொழும்பில் செயற்பட்ட பிரபலமான பாதாள உலக குழுத் தலைவரான பிரின்ஸ் கொலம் என்பவரின் சகாவாக செயற்பட்டு வந்த மல்லா, பின்னர் தனியான குழுவொன்றை வழிநடத்தி வந்ததுடமன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.