பக்கங்கள்

15 பிப்ரவரி 2011

ஸ்ரீலங்காவிற்கான ஆதரவு தொடரும் என்கிறார் பிரித்தானிய தூதர்!

பிரித்தானியா இலங்கைக்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கும் என அந்நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது நியமனப் பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்த பின்னரே ரன்கின் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் வரலாற்று ரீதியில் காணப்படும் நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவு க்கும் இடையில் வர்த்தகம் சுற்றுலா போன்ற துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது மேலும் அபிவிருத்தியடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட் டார்.அண்மையில் இலங்கை யின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.