பக்கங்கள்

14 பிப்ரவரி 2011

மீன் பிடிப்பதற்கு பாஸ் பெறவேண்டுமாம்,யாழில் உத்தரவு!

யாழ் மாவட்டத்தில் மீண்டும் குடும்பப் பதிவுகளை மேற்கொள்வதற்கு இராணுவம், கடற்படை உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றது.யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் புகைப்படத்துடன்கூடிய குடும்ப விபரங்களை பதிவு செய்வதற்கு கிராம அலுவலர் ஊடாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள அதே வேளை கடற்படையினரும் கடற்தொழிலாளர்களுக்கு தொழில் செய்வதற்கான பாஸ் நடைமுறையினை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றையதினம் வடமராட்சிப் பகுதியில் பாஸ் நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தொழிலாளர்களை பாஸினைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதுடன் வடக்குக் கிழக்கு அபிவிருத்திகளை நோக்கிச் செல்வதாக அரசாங்கமும் அரசுடன் சார்ந்தோர்களும் கூக்குரலிட்டவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் இராணுவ சோதனை நடவடிக்கைகளும், பதிவு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது. தற்போது கடற்படையினரும் கடற்தொழில்களுக்குச் செல்வோருக்கான பாஸ் நடைமுறையை அமுல்ப்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.