பக்கங்கள்

19 பிப்ரவரி 2011

வடமராட்சி மீனவர்களை சந்தித்த படையதிகாரி!

யாழ்.வடமராட்சி மீனவர்களுக்கும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஹதுரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இன்று நண்பகல் நடைபெற்ற இச் சந்திப்பில் மீனவப்பிரநிதிகள் தாம் எதிர்கொண்டு வருகின்ற அன்றாட நெருக்கடிகள், இந்திய மீனவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலை என்பன குறித்து விரிவாக விளக்கமளித்து தமக்கு இவற்றில் இருந்து தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த இராணுவத்தளபதி கடல் சார்ந்த விடயங்கள் தமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.