பக்கங்கள்

15 பிப்ரவரி 2011

விமானத்தில் குண்டு என மிரட்டிய நபர் விடுதலை!

இலங்கையில் இருந்து மாலைத்தீவு நோக்கி பயணித்த விமானத்தில் குண்டு இருப்பதாக வதந்தியை பரப்பிய பயணியை மாலைத்தீவு பொலிஸார் விடுதலை செய்துள்ளனர் என மாலைத்தீவு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய ஊழியர் பயணியின் கருத்தினை தவறுதலாக புரிந்து கொண்டதனாலேயே விமானம் தரையிறக்கப்பட நேர்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் தனக்கு இடையூறு என பயணி தெரிவித்ததை தவறாக புரிந்து கொண்ட பயணி, விமானத்தில் குண்டு இருப்பதாக புரிந்து கொண்டு அதனை உயரதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.