பக்கங்கள்

25 பிப்ரவரி 2011

பஷில் கலந்து கொள்ளும் நிகழ்வில் த,தே,கூட்டமைப்பும் பங்குபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச கலந்து கொண்டுள்ள நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பங்குகொண்டிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள தேசிய வியாபார முகாமை நிலையத்தில் இந் நிகழ்வு நடைபெறுகின்றது.
பசில் ராஜபக்ச பங்கு கொண்டுள்ள இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பசில் ராஜபக்ச இன்று கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய கட்டடத்தினையும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.