பக்கங்கள்

03 பிப்ரவரி 2011

சரத் உள்ளே,கே,பி வெளியே கரு ஜெயசூரிய கவலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்த குமரன் பத்மநாதன் ஜனநாயக அரசியலில் ஈடுபடுகின்றமையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்விதமான பிரச்சினையும் கிடையாது என்று அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்து உள்ளார்.
இவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கியபோதே இவ்வாறு கூறினார். இவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கின்றமையில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய முன்னாள் இராணுவ தளபதி கைதியாக சிறையில் உள்ளார், கே.பி போன்றவர்களோ அரசியலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.