பக்கங்கள்

22 பிப்ரவரி 2011

நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த காமுகன்!

யாழ் உரும்பிராய் செல்வபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் உட்புகுந்த வாலிபர் ஒருவர் குடும்பப் பெண் ஒருவரை கடத்தி வல்லுறவு புரிய முனைந்ததாக தெரிக்கப்படுகிறது. குறித்த வாலிபர் வீடினுள் புகுந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவரை தூக்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்பெண் இட்ட கூக்குரலால் விழித்துக்கொண்ட கணவர் வெளியே ஓடிவந்து, அயலவர் உதவியோடு அவரை மடக்கிப் பிடித்துள்ளார்,பின்னர் அவரை ஊர் மக்கள் நையப்புடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. குறித்த வாலிபர் மதுபோதையில் இருந்தாரா இல்லை வேண்டும் என்று அவ்வாறு செய்தாரா எனத் தெரியவில்லை என்கின்றனர் ஊரார்.
பின்னர் காலை அவர் கோப்பாய் பொலீஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கே கையளிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை யாழ் நீதிமன்றில் கோப்பாய் பொலிசார் ஆஜர் படுத்தியுள்ளனர். அவரை 2 வாரம் காவலில் வைத்து விசாரிக்க யாழ் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.