பக்கங்கள்

18 பிப்ரவரி 2011

இந்தியாவின் காலக்கெடுவிற்கு அடிபணிந்தது ஸ்ரீலங்கா!

வட பகுதிக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 136 இந்திய மீனவர்களும் இன்று திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்படுவர் என முன்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று மாலை இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, சிறை வைக்கப்பட்டு இரண்டு நாட்களில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிருப்தி அளிப்பதாக பருத்தித்துறை மற்றும் மாதகல் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.