பக்கங்கள்

13 பிப்ரவரி 2011

கிளிநொச்சியில் கடத்தப்பட்டவர் பற்றிய தகவல்கள் இன்னும் இல்லை!

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் நேற்றுக் காலை தனியார் வர்த்தகர்க நிலைய உரிமையாளர் ஒருவர் வெள்ளை வானில் சென்றோரால் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டவர் மொடேன் ஸ்ரோர்ஸ் என்ற வர்த்தக நிலையமென்றை நடத்தும் 54 வயதுடைய எஸ்.தியாகராசா என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை 11 மணியளவில் குறித்த வர்த்தகர் தனது வர்த்தக நிலையத்தை திறந்தபோது அங்கு வெள்ளை வானில் சென்றோர் இவரை வாகனத்திற்கருகில் அழைத்ததை அப்பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளனர். எனினும் நடந்த சம்பவம் தொடர்பில் எவருக்கும் எதுவும் தெரியாது என கூறியுள்ளனர்.
இதேவேளை கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் வர்த்தகரின் கையடக்கத் தொலைபேசிக்கு அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டபோது தான் கொழும்பு சென்று கொண்டிருப்பதாகவும் சில தினங்களில் திரும்பி வந்து விடுவேன் எனவும் அழுது கொண்டே கூறியபோது அழைப்பை துண்டிக்கப்பட்டு உள்ளது.
எனினும் பின்னர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அழைத்த இலக்கம் பாவனையில் இல்லை என பதில் கிடைத்துள்ளது. இது குறித்து கிளிநொச்சி காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.