பக்கங்கள்

22 பிப்ரவரி 2011

இளவாலையில் உடலம் மீட்பு!

யாழ். இளவாலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடைய சடலம் வயல் வெளி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இளவாலை என்ற முகவரி உடைய காந்தன் (வயது 40) என்பவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அவருடைய சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையை வைத்தே அவரது பெயர் இனங்காணப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரவில்லை. கடந்த சில வாரமாக யாழ்ப்பாணத்தில் உயிரிழப்புக்கள் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.