பக்கங்கள்

22 பிப்ரவரி 2011

யாழ்,பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த பொலிஸ்!

வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வில் பங்கெடுப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாராவதாக வெளியாகிய தகவலை அடுத்து யாழ்.பல்கலைக்கழக வளாகம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறை தீருவிலில் மறைந்த வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன. இந்நிகழ்வில் பங்கு கொள்வதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் தயாராகியிருக்கின்றது.
இதேவேளை இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக பார்வதி அம்மாளின் நினைவு தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.