பக்கங்கள்

26 பிப்ரவரி 2011

சுவிசில் தனது பிள்ளைகளையே கத்தியால் குத்திய இலங்கைத்தாய்!

சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் தனது குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார். பெண் பிள்ளைகளான இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் தகப்பனார் வீட்டில் இல்லை.வீட்டில் நின்ற அம்மம்மா பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது கத்திக் குத்துக்கு இலக்கானார் என தெரிவிக்கப்படுகிறது.
பின்பு அவர் தனது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டுள்ளார் .
காயமடைந்த மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் ஆனால் ஆபத்துக்கள் நேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தகராறுக்கு என்ன காரணம் என்பது இன்னமும் வெளிவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.