பக்கங்கள்

14 பிப்ரவரி 2011

சர்வதேச நிபுணர் குழுவுடன் கலந்துரையாடல்!

வன்னி இறுதிக் கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு சர்வதேச நிபுணர்கள் பலருடன் விசேட கலந்துரையா டல்களை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கத் தின் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளக் கூடிய நிபுணர் குழுவின் செயற்பாடுகள் மற்றும் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற் கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டு வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுடன் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் நிபுணர்கள் இக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரத்திலிருந்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக இச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக் கலந்துரையாடலின் முடிபில் இலங் கை தொடர்பான நிபுணர் குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இறுதி முடிபொன்றை அறிவிப்பார்.இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் நிபுணர் குழுவின் முதலாவது கட்ட விசாரணைகள் கூட பூர்த்தி யடையவில்லை எனவும் நிபுணர் குழு எப்படி யும் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கம் பான் கீ மூன் ஒக்ஸ்போர்ட்டில் அறிவித் திருந்த ஒரு சில தினங்களில் இச் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை மேற் கொண்ட இராஜதந்திர நகர்வுகள் தோல்வியடைந்த ஒரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இரண்டாவது தடவை பதவிவகிக்க விரும்பும் பான் கீ முன் இலங்கை விவகாரம் தொடர்பில் காத்திரமான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங் கள் குறிப்பிடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.