பக்கங்கள்

13 பிப்ரவரி 2011

கடத்தப்பட்ட வர்த்தகர் நாலாம் மாடியில்!

கிளிநொச்சி மாவட்டத்தின் அம்பாள் குளம் பகுதியில் வைத்து நேற்று காலை 11.00 மணி அளவில் மர்மக் கும்பல் ஒன்றால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார் என்று நம்பப்பட்ட வர்த்தகர் தற்போது கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
கறுப்பையா தியாகராஜா (வயது-53) என்பவரே இவ்வர்த்தகர் ஆவார். இவரின் வர்த்தக நிலையத்துக்கு வந்த சிலர் இவரை வெள்ளை வான் ஒன்றில் ஏற்றிச் சென்று இருந்தனர்.
வந்தவர்கள் யார்? என்பது மர்மமாகவே இருந்தது. பின்னர் வர்த்தகருடன் தொடர்பு கொள்ள எவராலும் முடியவில்லை.
இந்நிலையில் வர்த்தகரின் குடும்ப அங்கத்தவர்கள் இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு மேற்கொள்ளச் சென்றிருந்தனர்.
அப்போது வர்த்தகரை கைது செய்து இருக்கின்றனர் என்று கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்து இருக்கின்றனர்.
வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றார் என்றும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு இடையில் விடுவிக்கப்பட்டு விடுவார் என்றும் பொலிஸார் தெரிவித்து இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.