நயினாதீவு விகாரையில் 3,157,000 ரூபா செலவில் பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளதாக வடபிராந்திய தளபதி றியர் அட்மிரல் சுசித வீரசேகர தெரிவித்துள்ளார்.
தென்பகுதியில் இருந்து வரும் பௌத்தர்களின் யாத்திரைத் தலமாக நயினாதீவு விகாரை மற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிட்ட றியர் அட்மிரல் சுசித வீரசேகர
நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் கடற்படை இறங்கியுள்ளது. கடற்படையின் உதவியுடன் தேசிய கட்டட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் இந்த விகாரை விரிவாக்கப்படவுள்ளது என்றார்
அத்துடன் விகாரையின் முகப்பும் அதற்கான நடைபாதையும், இறங்குதுறை மற்றும் அதற்காக நடைபாதை ஆகியனவும் புதிதாக அமைக்கப்படவுள்ளன. சுமார் 4 கோடி ரூபா செலவில் இந்தப் புனரமைப்பு வேலைகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றனர்
வடக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பது மற்றும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் கடற்படை தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே மாதகல்- சம்பில்துறையில் 2004ம் ஆண்டில் பௌத்த விகாரையொன்றை கடற்படை அமைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.