பக்கங்கள்

31 ஜனவரி 2011

புலிகளின் படங்கள்,சஞ்சிகைகள் வைத்திருந்ததாக படையதிகாரி கைது!

புலிகளின் சஞ்சிகைகள்,மற்றும் புகைப்படங்கள் வைத்திருந்த ஒரு படை அதிகாரியும் அவரது காதலியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் அவசர இலக்கமான 119 இலக்கத்துக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றை அடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பஸ் பயணி ஒருவரே குறித்த தகவலை வழங்கியுள்ளார்.குருநாகலில் இச்சம்பவம் நடந்துள்ளது.படைக் கோப்றலின் காதலி குறித்த புகைப்படங்கள்,சஞ்சிகைகளை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு அப்பயணி பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.