பக்கங்கள்

18 பிப்ரவரி 2011

சிங்கள நடிகை பாலியல் வல்லுறவின் பின் படுகொலை!

படுகொலை செய்யப்பட்ட பிரபல சிங்கள நடிகை வினு வெத்தமுனி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ரசாயனப் பகுப்பாய்வாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அவருடைய படுக்கையின் கீழ் பயன்படுத்தப்பட்ட ஆறு ஆணுறைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டிருப்பதே பிரஸ்தாப சந்தேகத்திற்கான காரணம் என்று அறிய முடிகின்றது.
அதுவும் தவிர நடிகையின் இரகசிய பிரதேசத்தில் ஒருவகையான திரவம் தடவப்பட்டிருந்தமை பிரேத பரிசோதனையின் போது சட்ட வைத்திய அதிகாரியினால் அவதானிக்கப்பட்டிருந்தது. அதே திரவம் கண்டெடுக்கப்பட்ட ஆணுறைகளிலும் காணப்பட்டது.
அதன் காரணமாக அவரைச் சந்திக்க வந்த இரண்டு மர்ம நபர்களாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆயினும் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருந்தமையே மரணத்திற்கான காரணம் என்பதும் பிரேத பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வாளரின் பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.