பக்கங்கள்

17 பிப்ரவரி 2011

தி.மு.க.வின் ஏமாற்று வேலை!

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி திமுக நடத்திய ஆர்ப்பாட்டம், தமிழர்களையும், மீனவர்களையும் ஏமாற்றும் வேலை என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இதை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி,
மீனவர்களின் அவலம் குறித்து, தி.மு.க. சார்பில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது வேடிக்கையாக இருக்கிறது. 2004 ம் ஆண்டில் இருந்து 7 வது ஆண்டாக மத்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.க., இவர்கள் வேறு, அரசு அதிகாரம் வேறு என்பது போல் போராட்டம் நடத்துகிறார்கள். இது, தமிழர்களையும், மீனவர்களையும் ஏமாற்றும் வேலை ஆகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.