பக்கங்கள்

19 பிப்ரவரி 2011

ஆளும் கட்சியை சேர்ந்த பலர் ஐ.தே.கட்சி பக்கம் தாவ தயார் நிலையில்!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்தரப்பினர் ஜனாதிபதியை எச்சரித்துள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின் போது ஆளும் கட்சியின் வாக்கு வீதத்தில் சரிவு ஏற்படுமிடத்து குறைந்தபட்சம் பத்துக்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவும் உத்தேசத்துடன் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசுபக்கம் தாவிய சிலருக்கு மீண்டும் தமது பழைய கட்சிக்கே திரும்பிவிடுவது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
அரசாங்கத்தின் உயர்மட்டமுக்கியஸ்தர்கள் செல்வாக்கிழந்து வருகின்றமை, கட்சிக்காகப் பாடுபட்டவர்களைவிட ராஜபக்ச குடும்பத்தினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை என்பன போன்ற செயற்பாடுகளே ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருப்ப தாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரஸ்தாப அறிக்கை கிடைத்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள அமைச்சர்களைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, உள்ளூராட்சித் தேர்தலின்பின் அவர்களுக்கு முக்கியத்துவம் மிக்க அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதாக வாக்களித்துள்ளதாகவும் அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.