பக்கங்கள்

27 பிப்ரவரி 2011

ஊர்காவற்றுறையில் ஈ,பி,டி,பி,முக்கியஸ்தர் கைது!

யாழ். தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் கடந்த 24 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலம் மீட்கப்பட்டது தெடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் ஊர்காவற்துறையில் மேற்கொண்ட இரகசிய விசாரணைகளில் ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் எனத்தெரியவருகின்றது
விசாரணைகளின் பின்பு சந்தேக நபர் நாளை திங்கள் கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.