பக்கங்கள்

15 நவம்பர் 2010

அரசின் தடைகளையும் தாண்டி நடைபெற்ற கையெழுத்துப் போராட்டம்!

அரசாங்கத்தின் பல இடையூறுகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நாம் இலங்கையர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார வைபவம் இன்று இடம்பெற்றது.
வடக்கில் யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தும் மகஜரில் கையொப்பமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வைக் குழப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை என்று இதன் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
ஜே.வி.பி.தலைவர். சோமவன்ஸ அமரசிங்க, செயலாளர் டில்வின் சில்வா உட்பட பெருந்திரளான ஜே.வி.பி உறுப்பினர்களும், ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிதிகளும் கலந்து கொண்டனர்.
நேற்று தாக்குதலுக்குள்ளாகி யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்னெட்டியும், மற்றவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.