பக்கங்கள்

19 நவம்பர் 2010

நதீகா சுபாஷினியின் உடல் இன்று மீட்கப்பட்டது!

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிர் இழந்த களனி பல்கலைக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவி நதீகா சுபாஷினி என்கிற இளம் யுவதியின் சடலம் மாத்தளை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடம் ஒன்றில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சமத் மதநாயக்க, சட்ட வைத்திய அதிகாரி எச்.டி.கே. விஜயவீர ஆகியோர் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்தைக் கயிற்றின் உதவியுடன் சென்றடைந்தனர்.
மேலதிக நீதிவானின் மேற்பார்வையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. நதீகா சுபாஷினியை கொன்றார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் காதலரான வசந்த அமரசிங்க என்கிற இளைஞன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.