பக்கங்கள்

24 நவம்பர் 2010

சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம்!தொண்டராசிரியர் கைது.

தரம் ஐந்தில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் சில்மிசம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தொண்டராசிரியர் ஒருவரை நோட்டன் பொலஸார் கைது செய்துள்ளனர்.
டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய இளம் தொண்டராசிரியரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் நேற்று 22 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோட்டன் பொலிஸ் பிரிவைச்சேர்ந்த பாடசாலை ஒன்றின் தொண்டராசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டைத்தொடர்ந்தே இந்தத் தொண்டராசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத்தொடர்ந்து இந்தத்தொண்டராசிரியரால் பாலியல் சில்மிஸத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற ஒன்பது தொடக்கம் பத்து வயது வரை வயதையுடைய ஏழு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ பரிசோதனைக்குப்பிறகே குறிப்பிட்ட தொண்டராசிரியருக்கெதிராக அட்டன் நீதிமன்றத்தின் மூலமாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென நோட்டன் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.