பக்கங்கள்

07 நவம்பர் 2010

கடத்திச் செல்லப்பட்ட 17 வயதுச் சிறுமி மீட்பு!

காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமியைப் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். குறித்த சிறுமிக்கு 17 வயது ஆகும். இவரை மூன்றுபேர் சேர்ந்து கடத்திச் சென்றனர். சிறுமியின் தகப்பனாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இச்சிறுமி கடத்தப்ப்பட்டார். கடத்திச் செல்லப்பட்ட சிறுமி அதே பிரதேசத்திலுள்ள வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். எனினும், குறித்த இடத்தை மோப்பம் பிடித்த போலீசார் சிறுமி கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களில் அவரை மீட்டுள்ளனர்.
காத்தான்குடி நகரத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு இச்சிறுமியை முச்சக்கரவண்டியொன்றில் கடத்தல்காரர்கள் இழுத்துச் சென்றுள்ளனர். அச்சிறுமி தகப்பனாருடன் சென்றுகொண்டிருந்தபோதே இக்கடத்தல் நடந்தது. காத்தான்குடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து மேற்படி சிறுமி மீட்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.