பக்கங்கள்

07 நவம்பர் 2010

வடகிழக்கு இணைப்பிற்கு பிள்ளையான் கட்சி எதிர்ப்பாம்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைப்பதற்கு தமிழ் கட்சிகளின் அரங்கிலுள்ள ஏனைய அரசியல்க் கட்சிகள் விருப்பம் தெரிவித்தபோதிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இதனை எதிர்த்துள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த அரங்கமானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி போன்ற 10 தமிழ்க் கட்சிகளை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக இந்த விடயத்தின் ஒரு பொதுக்கருத்துக்கு வருவது அரங்கத்திற்கு கடினமாக இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.