பக்கங்கள்

07 நவம்பர் 2010

அரசியல் கைதிகளின் குடுபத்தவர்கள் தொடர்பு கொள்க: மனோகணேசன்.

கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, பதுளை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட சிறைச்சாலைகளிலும் மற்றும் பூசா தடுப்பு முகாமிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்
இது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது முழுப்பெயர், அடையாள அட்டை இலக்கம், கைது செய்யப்பட்ட திகதி, தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அல்லது முகாம், குடும்ப அங்கத்தவரது தொடர்பு விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை மக்கள் கண்காணிப்புக் குழு தபால் பெட்டி இலக்கம் 803 கொழும்பு அல்லது இல.72 பாங்ஷால் வீதி, கொழும்பு11 என்ற விலாசத்திற்கு அனுப்புமாறும் அவர் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.