பக்கங்கள்

27 நவம்பர் 2010

கல்முனையில் ஆயுதங்களுடன் புலிகள் என படை உஷார்!

கல்முனைப் பிரதேசத்தில் காணப்பட்ட மர்ம ஆயுததாரிகள் காரணமாக அப்பிரதேசமெங்கும் பலத்த பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளதுடன், படைத்தரப்பு உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை வெல்லாவெளி பிரதேசத்தில் இன்று காலை சிவில் உடையில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களின் நடமாட்டத்தை சிலர் அவதானித்துள்ளனர். வெளியாரைக் கண்வுடன் சடுதியில் அவர்கள் மறைந்து காணாமற்போயுள்ளனர்.
அவர்களின் பயண திசையானது மட்டக்களப்பிலிருந்து கல்முனை ஊடாக தென்பகுதி நோக்கியதாக (கஞ்சிகுடிச்சாறு பக்கமாக) அமைந்திருந்ததாக அவர்களைக் கண்ட பிரதேச வாசிகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.
வெல்லாவெளி பிரதேசத்தின் பலரும் அவர்களைக் கண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அப்பிரதேசமெங்கும் பதட்டம் பலமாகத் தொற்றிக்கொண்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் இராணுவம், பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பிரதேசமெங்கும் சோதனை மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் மர்ம நபர்கள் மாயமாக மறைந்து விட்டிருந்தனர்.
சிவில் உடையில் ஆயுதந்தாங்கிய மர்ம நபர்கள் புலிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக தற்போதைய நிலையில் அம்பாறைப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்புத் தரப்பினர் உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.