பக்கங்கள்

20 நவம்பர் 2010

படை வாகனம் மோதி முறிகண்டி சென்ற தம்பதி சாவு!

வெளிநாட்டில் இருந்து வந்த தமது பிள்ளைகளின் நேர்த்திக் கடனை தீர்ப்பதற்காக முறுகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் போது படையினரின் வாகனத்ம் மோதி இருவர் பலியாகினர்.
நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக நல்லூரில் இருந்து முறிகண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினரை மாங்குளத்தில் இருந்து வந்த படையினரின் வாகனம் முறிகண்டி இந்துபுரம் பகுதியில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நல்லூர் தம்பதிகள் பலியாகினர்.
கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட இவர்களின் சடலத்தை அங்கு நின்ற அவர்களின் உறவினர் ஒருவர் தற்செயலாக கண்டு அடையாளம் காட்டியதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவத்தில் படையினர் 8 பேர் காயமடைந்ததாகவும் தெரியவருகின்றது. நல்லூர் செட்டித்தெருவைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா (வயது 52), அவரது மனைவியான செல்வராசா நகுலேஸ்வரி (வயது 48) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.