பக்கங்கள்

10 நவம்பர் 2010

பூநகரியில் பெண் மீது சிங்களப்படை வெறியாட்டம்!

தனிமையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த இளம் தாய் ஒருவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை இரண்டு சிங்கள சிப்பாய்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
பூநகரி, கிராஞ்சி மொட்டையன் புலவு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் பிரஸ்தாபப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்தக் கொடூர சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றன என்றும், மரண பயம் காரணமாக இப்படியான சம்பவங்கள் வெளிவருவதில்லை என்றும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி விசுவமடுப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் இரு குடும்பப் பெண்கள் சில சிங்களப்படைகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை கிளிநொச்சி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.