பக்கங்கள்

22 நவம்பர் 2010

போர்க்குற்ற அறிக்கையை வெளியிடும்படி ஐ.நாவை வற்புறுத்தவேண்டும்!

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் திட்ட அறிக்கையொன்றைத் தயாரிக்கவேண்டுமென்று உலகமடங்கிலுமுள்ள தமிழர்கள் வலியுறுத்தவேண்டுமென இலியோனிஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் பொய்ல் கூறியுள்ளார்.
சர்வதேச சட்டம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவரான பேராசிரியர் பொய்ல், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நிகழ்ந்'த மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பன குறித்து ஐக்கிய நாடுகள் திட்ட அறிக்கை ஒன்றைத் தயாரித்திருப்பது சம்பந்தமாகவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பான கட்டுரை ஒன்றைச் சர்வதேச சட்டத்திற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.
கொங்கோவில் நடந்த மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் போன்ற போர்க்குற்றங்களே இலங்கை அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 500 பக்கங்களைக் கொண்ட கொங்கோ சம்பந்தப்பட்ட அறிக்கையில் கொலைகள், வல்லுறவுகள், நாசம் விளைவித்தமை மற்றும் பயங்கரமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் சர்வதேச சட்டம் தொடர்பான அமெரிக்க அமைப்பின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் திட்ட அறிக்கை தயாரிக்கும் செயற்பாடுகள் 2008 யூலையில் ஆரம்பிக்கப்பட்டன. சர்வதேச குற்றங்கள் புலனாய்வு மேற்கொள்வதிலும் வழக்கு தொடர்வதிலும் நிபுணத்துவமிக்க கனடிய வழக்கறிஞரான லக்கோட் (Luccote) என்பரின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1280 சாட்சிகளிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.2008 அக்டோபர் மாதத்திற்கும் 2009 மே மாதத்திற்கும் இடையிலான காலப்பகுதியில் 1500 ஆவணங்கள் கொங்கோ ஜனநாயக குடியரசு முழுவதும் திரட்டப்பட்டன என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்ட அறிக்கை 2009 யூன் மாதம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2010 ஆகஸ்டில் அது இறுதி முடிவு செய்யப்பட்டது.
இந்த அறிக்கை தொடர்பான விபரங்கள் ஊடகங்களுக்கு கசியத் தொடங்கிய பின்னர் இரு மாதங்கள் கழிந்த நிலையில் 2010 அக்டோபர் அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இலங்கையில் 40000 தமிழ் பொது மக்கள் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதும் இலங்கை பாதுகாப்பு படைகளின் மிகக் கொடூரமான நடவடிக்கைகளும் கொங்கோ தொடர்பில் ஐக்கிய நாடுகளினால் வெளிக்கொணரப்பட்ட தகவல்களை ஒத்ததாக அல்லது அதை விட மோசமானதாக அமைந்திருப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட செயற்பாட்டுக் குழுவான இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் (TAG) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யுத்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்கள், சாத்தியமான இனப்படுகொலைகள் என்பன கொங்கோ நாட்டில் இடம்பெற்றுள்ளன என்பதை சுட்டிக்காடடியுள்ள அவர், இலங்கையிலும் அதைப்போன்ற மிக மோசமான குற்றச்செயல்கள் இடமபெற்றுள்ளதாகவும் எனவே சுயாதீனத்தன்மையுடன் கூடிய சர்வதேச விசாரணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றப்பத்திரத்தை சட்டரீதியாகத் தயாரிக்க வழிவகை செய்யப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
சர்வதேச சட்டத்திற்கான அமைப்பு (ASIL) வெளியிட்டுள்ள கட்டுரையில்,
நேற்றைய குற்றங்களுக்கான தண்டனை குறித்த பயமின்மை எனும் நடைமுறையானது இன்றைய குற்றங்களை அடிக்கடி மேற்கொள்ள வழிவகுக்கிறது. ஏனெனில் அதற்குப் பொறுப்பான குற்றவாளிகள் அதனை அடிக்கடி செய்வார்கள். அத்தகைய சூழ்நிலையில் பொறுப்புக் கூற வேண்டிய குற்றவாளிகளை வைத்திருப்பது வன்முறைகளைத் தடுக்கும் நடைமுறையை இல்லாமற் செய்துவிடும் என்று இறுதியாகத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.