பக்கங்கள்

09 நவம்பர் 2010

அரசுடன் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழர் விருப்பமாம்!பீரிஸ் சொல்கிறார்.

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவிரும்புவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தபோதே பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும்.யுத்த காலப் பகுதியில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது புலம்பெயர் தமிழர் களுக்கு இடையில் வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.