பக்கங்கள்

08 நவம்பர் 2010

பாகிஸ்தான் ஸ்ரீலங்கா உறவு,சர்தாரி வருகிறார்!

பாகிஸ்தானுடன் உறவு வைப்பதற்காக இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதனொரு கட்டமாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார்.
இங்கு வரும் சர்தாரி, இலங்கையின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளி லும் கைச்சாத்திடவுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவியை ஏற்கவுள்ள மகிந்த ராஜபக்ச அதன்பின் சந்திக்கின்ற முதலாவது வெளிநாட்டுத் தலைவர் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியாகவே இருப்பார் என கூறப்படுகின்றது. ஏற்கனவே சீனாவுடன் உறவுகளை வளர்த்து வரும் இலங்கை அரசு தற்போது பாகிஸ்தானுடனும் நெருங்கிய உறவை ஏற்படுத்த முயற்சிப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி இலங்கைக்கு வரும் காலப்பகுதியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இங்கு வரு வதானது இலங்கை தொடர்பான இந்தியாவின் முடிபில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.