பக்கங்கள்

26 நவம்பர் 2010

யாழ்,தினக்குரல் அலுவலகம் ஆயுததாரிகளால் சுற்றிவளைப்பு!

யாழ். தினக்குரல் அலுவலகம் ஆயுததாரிகள் கொண்ட குழு ஒன்றால் நள்ளிரவு முதல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வான் ஒன்றில் கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவர்கள் கத்திகள், பொல்லுகள் உட்பட ஆயுதங்கள் பலவற்றையும் உடைமையில் வைத்திருக்கின்றனர். அலுவலகம் அமைந்துள்ள வீதியை சுற்றி சூழ்ந்து நிற்கின்றனர்.
யாழ். தினக்குரல் அலுவலகத்தில் இரவு நேர வேலையில் உள்ள ஊழியர்கள் மரண பீதியில் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.