பக்கங்கள்

17 நவம்பர் 2010

வெள்ளையனை வெளியேற்று

அதிகாலை அலுவலகம் செல்லுமுன்
மேல் பகுதியில் உள்ள கறுப்பர் குடியிருப்பை
ஆராய்ந்த போது அதிர்ந்து போனேன்.
கறுப்பர் குடியிருப்பில் ஓரிரு வெள்ளையரின் நடமாட்டம்.
பொத்திக் கொண்டு வந்தது கோபம்.
வெள்ளையரை வேரறுத்து விட்டு நிம்மதியாய் அலுவலகம் சென்றேன். ஆனால்
அந்த வெற்றி அதிக நாளைக்கு நீடிக்க வில்லை.
மீண்டும் வெள்ளையர் கண்ணில் பட நானும்
போர் கோலம் பூண்டு வெள்ளையரை அகற்ற தொடங்கினேன்.
எவ்வளவு முயன்றும் வெள்ளையனின் ஆதிக்கத்தை
முற்றாக முறியடிக்க முடியவில்லை.
புற்று நோய் போல வெள்ளையர் எல்லா இடமும் பரவ,
காலம் காலமாக இருந்த கருப்பர்கள் கூட
காலத்தின் கோலத்தால் வெள்ளையனாக மாறுவதை நிறுத்த முடியவில்லை.
வெள்ளையனை தொடர்ந்து வேரருத்தால்
குடியிருப்பே காலியாகும் அபாயம் கூட இருந்தது.

எத்தைனையோ குடியிருப்புக்கள் இன்று
பட்டுபோய் பாலைவனமாக போய்விட்டது.
அதோடு ஒப்பிடும்போது வெள்ளையர் வரவு பரவாயில்லைதான். ஆனால்
கருப்பு இளைமையின் அடையாளம்.
வெள்ளை முதுமையின் ஆரம்பம்.
அதை ஜிரணிக்கவோ விட்டு கொடுக்கவோ மனமில்லை.
விடை தெரியாமல் நின்ற எனக்கு
விஞ்ஞானம் கை கொடுத்தது.
வெள்ளையனை தேடி பிடித்து
சாயம் பூசி கருப்பனாக்கும்
வித்தையை சொல்லி தந்தது.

இப்போதைக்கு நான் மீண்டும்
இளமையுடன்
- ஆக்கம் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.