பக்கங்கள்

26 நவம்பர் 2010

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானமூலம் புறப்பட்டுச் சென்றவரை காணவில்லை!

யாழ் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த செல்வரத்தினம் ருதீபன் என்பவரை கடந்த ஒருவாரமாக காணவில்லை என அவரின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
இவரைப் பற்றி மேலும் தெரியவருவதாவது; 28 வயதுடைய மேற்படி நபர், கடந்த 19.11.2010அன்று காலை 8:45 மணிக்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானமூலமாக புறப்பட்டுச் சென்றதாகவும், ஆனால் இதுவரையும் இவர் நாட்டிற்கு சென்றதற்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என அவரது சகோதரன் தெரிவித்திருந்தார்.
இந்திய விமான நிலையத்தில் இருந்து உறவினர்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவிட்டு, விமானத்தில் ஏறிய இவர், இலங்கை விமான நிலையத்தில் இருந்து வெளியில் சென்றாரா? இல்லை இலங்கை விமான நிலையத்தில் வைத்து காணாமல் போனாரா என இன்றுவரை மேற்படி நபரைச் சார்ந்தோர்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இவரோடு அன்றைய நாளில் பயணம் செய்தோர் இவரைப் பார்த்திருந்தால் அல்லது இவருக்கு என்ன நடந்தது என தெரிந்தால் கீழுள்ள மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்துமாறு அவருடைய மூத்தசகோதரன் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றார்.
phoneparis@yahoo.fr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.