பக்கங்கள்

16 நவம்பர் 2010

வேலணை-அராலிச் சந்தியில் மினிபஸ் குடைசாய்ந்தது!

வேலணை அராலிச் சந்தியில் பயணிகள் மினிபஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்ததில் இருபது பயணிகள் காயமடைந்தனர்.இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்றுறை-யாழ்ப்பாணம்‘780’பயணிகள் சேவையில் ஈடுபட்ட மினிபஸ் வேலணை அராலிச் சந்தியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது.
இதில் பயணம் செய்த பயணிகள் இருபது பேர்வரை காயமடைந்துள்ளனர்.இவ்வாறு காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 35), அவரது மனைவி கெளரி (வயது 33), மகன் (வயது 03) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருடன் நாரந்தனை மத்தி ஜெ.வசந்தகுமார் (வயது 40) மற்றும் மினிபஸ் நடத்துநர் இ.செந்தில் (வயது 30) ஆகிய 5 பேருமே யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ் விபத்துக்குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.