பக்கங்கள்

18 நவம்பர் 2010

ஊர்காவற்றுறையில் மக்களை விரட்டி அடித்தது ஒட்டுக்குழு!

யாழ்ப்பாண மக்கள் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்சாட்சியம் வழங்குகின்றமையில் இருந்து ஆயுதக் குழு ஒன்றால் விரட்டியடிக்கப் பட்டு இருக்கின்றார்கள் என்று உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கபே தெரிவித்துள்ளது.
யாழில் கடந்த 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை பல இடங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றன.
ஊர்காவல்துறையில் இடம்பெற்ற அமர்வுக்கு சாட்சியம் வழங்க வந்த மக்களே ஆயுதக் குழு ஒன்றால் விரட்டியடிக்கப்பட்டனர் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளை அவதானிக்கும் பணியில் யாழில் நேரடியாக ஈடுபட்டிருந்த அமைப்புக்களில் ஒன்றான கபே கூறி உள்ளது. கபேயின் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.