பக்கங்கள்

26 நவம்பர் 2010

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்!போராளி.

உலகத் தமிழினத்தின் தலைநிமிர்விற்கு இன்று அகவை 56. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 56வது பிறந்த நாள் அன்று களத்தில் இருந்து இனிப்பான நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மே௧9ம் திகதிக்கு பின்னர் எல்லாமே முடிந்துவிட்டதாக எதிரிகள் கதையளக்க அதை நம்பி துரோகிகள் கூக்குரல் இட்டு ஆரவாரம் செய்ய ஒவ்வொரு நிமிடங்களும் உலகத் தமிழர்களிற்கு ஒவ்வொரு யுகங்களாக கடந்து வருகையில் அவ்வப்போது நம்பிக்கையான தகவல்கள் பலவழிகளில் கிடைத்த வண்ணமுள்ளது. அந்தவகையில் வன்னி களமுனையில் இருந்து நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது. அதனை இந்த தலைவனது பிறந்தநாளில் உலகத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.
மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் உழவுஇயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவரை இடைமறித்த களத்தில் உயிர்ப்புடன் இருக்கும் போராளிகள் குழு ஒன்று இந்த நம்பிக்கையான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாங்கள் அழிந்து போய்விடவில்லை. உயிருடன் பத்திரமாகத்தான் இருக்கின்றோம். உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டுதான் உள்ளோம். அடுத்கட்ட பாய்சலுக்கு வாய்ப்பான சூழலில் தலைவரிடம் இருந்து வரும் கட்டளைக்காக காத்திருக்கின்றோம். தயவுசெய்து புலம்பெயர்ந்து இருக்கும் எமது உறவுகளிடம் சொல்லுங்கள்...
எதிரியாலும் துரோகிகளாலும் வெளியிடப்படும் செய்திகளையும் தகவல்களையும் நம்பவேண்டாம். நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்றும் அண்ணை(தலைவர்)வெளியில் வந்து தமிழீழத்தை மீட்பது விரைவில் நடக்கத்தான் போகின்றது. அதற்கு ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக புலம்பெயர்வாழ் உறவுகள் களமாடவேண்டியது அவசியமாகும். என்ற தகவலை சொல்லிவிட்டு களநிலவரம் தொடர்பாக சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டுவிட்டு கடந்து சென்றுள்ளனர் இன்னும் உயிர்ப்புடன் களப்பணியில் தம்மை அர்பணித்துக் கொண்டிருக்கும் தேசத்தின் புயல்கள்.
அன்புத் தமிழ் உறவுகளே! தமிழீழம் என்பது குறிப்பிட்ட சிலரது விருப்பமோ ஆசையோ எதிர்பார்ப்போ அல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் வேண்டிய அவசியமான நிலையாகும். ஆகவே குறிப்பிட்ட சிலரோ அல்லது குறிப்பிட்ட சில குழுவினரோ ஒட்டுமொத்த சுமையையும் தாங்கிக் கொண்டு தமிழீழ விடுதலைக்கான பணியை தொடர்ந்து செய்ய முடியாது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் அன்நிய ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் எமது தாபயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
தலைவரது இருப்புத் தொடர்பாகவும் களமுணையில் மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமா...? என்ற விவாதங்களில் இனியும் காலத்தை விரையமாக்காது விரைந்து பணியாற்றுவோம். அனைத்துலக மன்றங்களில் எமது கோரிக்கையை வலுவாக முன்வைத்து தலைவரது வரவிற்கும் அத்தோடு இணைந்த தமிழீழ மலர்விற்கும் விரைந்து வழியேற்படுத்துவோம்.
தமிழீழ விடுதலையை தமது உயிர் மூச்சாக வரித்துக் கொண்டு கடலிலும் தரையிலும் வானிலும் கரைந்து போய் காவியமான எமது மானமறவர்களான மாவீரர்களை போற்றிபுகழ்ந்து நிணைவெழுச்சி கொள்ளும் இந்த புணிதநாட்களில் அந்த மாவீரர்களது புணித ஆத்மாவை சாட்சியாக்கி சொல்கின்றோம் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் எமது பாசத்திற்குரிய பல்லாயிரக்கணக்கான உறவுகளை கொன்று குவித்ததோடு விழுப்புண்னடைந்து களத்தில் இருந்த பல்லாயிரம் போராளிகளையும் அனைத்துலக போர்விதிகளை மீறி கொன்று குவித்து கொலைவெறியாட்டம் நிகழ்த்திய சிங்களத்திற்கும் அதற்கு துணைநின்ற நாடுகளிற்கும் தமது பிராந்திய நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக நிகழ்ந்தேறிய கொடுமைகளை வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்தத உலக வல்லரசுகளிற்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி சுதந்திர தமிழீழத்தை தலைவர் அமைப்பது சர்வ நிட்சயம்.
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்...? உலகத் தமிழர்களே சிந்தியுங்கள். துணிவுடன் முடிவெடுங்கள். இறுதி இலக்கான தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை ஓயமாட்டோம் என்று தமிழீழக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப்பேழைகளாகிய முப்பத்தேழாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது கல்லறைமீது வீர சபதமெடுத்து களமாட இன்றே புறப்படுங்கள்.
நாளை நமதே. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி:ஈழதேசம்.கொம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.