பக்கங்கள்

18 நவம்பர் 2010

மெளனம் கலைக்கிறார் திஸ்ஸநாயகம்!

அனைத்துலக சமூகம் கடைப்பிடித்துவரும் மென்போக்கு அரசியல் சிறீலங்கா அரசின் போக்குகளில் மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை என சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் இருந்து அண்மையில் விடுதலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் நேற்று (17) தெரிவித்துள்ளார்.
எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அவரின் நேர்காணலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எனது விடுதலை கூட அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கூட நிறுத்தியிருந்தது.
சிறீலங்காவில் நிலமை மோசமடைந்துள்ளது. அங்கு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புக்கள் இல்லை. எனவே தான் அவர்கள் கொல்லப்படுகின்றனர், காணாமல்போகின்றனர், தாக்கப்படுகின்றனர். அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தியும் அரசு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்துள்ளது.
அச்சம் காரணமாக பல ஊடகவியலாளர்கள் சுய தணிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். எனவே எனது கருத்துப்படி சிறீலங்கா அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
சிறீலங்காவுக்கு வழங்கப்படும் பொருளாதார உதவிகள், ஊடகத்துறையின் சுதந்திரத்துடன் தொடர்புள்ளதாக இருத்தல் வேண்டும். அதன் மூலமே சிறீலங்கா அரசின் மீது அழுத்தங்களை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.