பக்கங்கள்

30 நவம்பர் 2010

மகிந்தவிற்கு எதிரான போராட்டத்திற்கு பொலிசார் அனுமதி.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொலிசார் அனுமதியளித்துள்ளனர்.
எதிர்வரும் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு பிரித்தானியப் பொலிசாரிடம் ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதற்கான அனுமதி தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், இன்று லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவற்றுக்கு மேலதிகமாக பாரிய பதாகைகளைத் தொங்கவிட்டவாறு வேன்களிலும் பிரதேசம் தோறும் மக்களை அறிவுறுத்தும் பிரசார நடவடிக்கைகளும் தற்போதைக்கு ஆரம்பமாகியுள்ளன.
தற்போதைய நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, முஸ்லிம், சிங்கள மக்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்த பட்சம் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.