பக்கங்கள்

27 நவம்பர் 2010

வல்வெட்டித்துறையில் சிங்களப்படையினர் அராஜகம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறை முழுக்க பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது யாழ். செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் 56வது பிறந்த தினமான நேற்று அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு யாரும் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கிலேயே வல்வெட்டித்துறை முழுக்க இராணுவத்தினர் குவிக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் வல்வெட்டித்துறை வழக்கத்துக்கு மாறான இராணுவத்தின் தொடர் ரோந்து நடவடிக்கைகளால் ஒருவித அச்ச நிலைக்குள்ளாக்கப்பட்டிருந்தது. வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களின் நடமாட்டம் பெருமளவுக்குத் தடைசெய்யப்பட்டதைப் போன்று மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். அத்துடன் வல்வெட்டித்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் கோயில்களும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.