பக்கங்கள்

17 நவம்பர் 2010

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களை சந்திக்கவுள்ளார்.

என்.எஸ்.எஸ்.பி கட்சியின் பொதுச் செயலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் பொதுமக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஆரம்பம் முதல் நீதியான, தெளிவான, ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுவரும் கலாநிதி விக்கிரமபாகு, தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றார்.
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவாக இருக்கட்டும், அல்லது முன்னயை அரசுத் தலைவர்களாக இருக்கட்டும், அவர்களுக்கு எதிராக கொழும்பில் இருந்தவாறு துணிந்து குரல் கொடுக்கும் சிங்கள கட்சியின் தலைவராக இவர் இருந்து வருகின்றார்.
ஏனைய அரசியல் தலைவர்களும், கட்சிகளும் மகிந்த அரசுக்கு அடிபணிந்துள்ள போதிலும், கொள்கையில் உறுதியாக இருந்து தமிழ் மக்களிற்காகவும், சிங்கள தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவுடன் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள பிரித்தானிய தமிழர் பேரவை சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நீதியான கருத்துக்களைக் கொண்டு செல்ல இதனை ஒரு சந்தர்ப்பமாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை நேரஞ்சல் செய்வதற்கும், ஊடகங்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுடன், அவரது கருத்தைப் பெறும் தளமாக இந்த சந்திப்பை பயன்படுத்துமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 25ஆம் நாள் வியாழக்கிழமை வட மேற்கு லண்டனிலுள்ள சவுத் ஹறோ பகுதியில் மாலை 7:00 மணி தொடக்கம் இரவு 10:00 மணிவரை இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இடம் - Harrow Borough Football Club Hall, Earlsmead, Carlyon Avenue, South Harrow HA2 8SS
நேரம் - மாலை 7:00 மணி
அருகிலுள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் - Central Line NORTHOLT , Piccadilly Line SOUTH HARROW
பேரூந்துகள் - சவுத் ஹரோ தொடரூந்து நிலையத்தில் இருந்து, அதே பக்கத்தில் இருந்து (சம்பல் சொப் முன்பாக) 140, 395, 398, 487 போன்ற நோத்ஹோல்ட் செல்லும் பேரூந்துகளில் ஏறி இரண்டாவது தரிப்பிடம்.
நோத்ஹோல்ட் தொடரூந்து நிலையத்தில் இருந்து, அதே பக்கத்தில் இருந்து 282 என்ற மவுன்ட் வேனன் மருத்துவமனைக்குச் செல்லும் பேரூந்தில் ஏறினால் இரண்டாவது தரிப்பிடம்.
மேலதிக விபரங்களுக்கு:
020 8808 0465
079 5850 7009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.