பக்கங்கள்

06 நவம்பர் 2010

மாணவர்கள் இருவர் வௌ்ளவத்தை கடற்பரப்பில் மூழ்கி மரணம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஆறு தமிழ் மாணவர்கள் நேற்று தீபாவளி தினத்தன்று மாலை கொழும்பு - வெள்ளவத்தைக் கடலோரமாக தீபாவளி கொண்டாட்டங்களுக்காக ஒன்றுசேர்ந்து பின்னர் கடலில் நீராடச்சென்றுள்ளனர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது மூச்சுதிணறி கத்தியுள்ளனர் சத்தத்தைக் கேட்டு அருகாமையில் நின்ற கடற்கடையினர் காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஆறுபேரில் நான்கு பேரைதான் அவர்களால் காப்பாற்ற முடிந்தது இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவரின் உடல் நேற்று மாலை 6 மணிக்கும், மற்றொருவரது உடல் 7 மணிக்கும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் உரும்பிராய் பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்ட நரசுதன், வவுனியா மாவட்டத்தில் கற்குழியைச் சொந்தமாக கொண்ட அன்புதாஸன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர். குறிப்பிட்ட மாணவர்கள் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவபீடத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள் ஆவர்.
இவர்களது உடல்கள் தற்போது களுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.