பக்கங்கள்

12 நவம்பர் 2010

அளவெட்டியில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு!

அளவெட்டி அழகொல்லை பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி சஞ்சீவ் (வயது 24) என்பவரே காயமடைந்தவராவார். ஆலயத்தில் தவில் வாசித்துவிட்டு வெளியே வந்த வேளையில் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபரை அழைத்த ஆயுதாரி அவரின் துப்பாக்கியை நெற்றிப் பகுதியில் வைத்துள்ளார். அப்போது விளையாட்டு என நினைத்து அவர் உடலை அசைத்துள்ளார் அதன்போது துப்பாக்கி வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் அவ் இளைஞன் இடுப்பிலும் கைப்பகுதியிலும் சூட்டுக்கு இலக்கானார்.
படுகாயமடைந்த அவர் நேற்றிரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவர்மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.